• Sep 20 2024

விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா-அவரே கூறிய விடயம்..ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் ரீச்சாகிடும்.

ஏற்கனவே பிரபலமானவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களிடத்தே அதிகம் விரும்பும் ஒருவராக மாறிவிட்டார்.

இந்நிலையில் கடந்தமாதம் பிரியங்கா தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி இருக்கிறார். மேலும் பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் சேர்ந்து பிரியங்காவுக்கு பிறந்தநாளில் பல கிப்ட்கள் கொடுத்து இருக்கின்றனர். அதை எல்லாம் பார்த்து பிரியங்கா நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்.

கேக் வெட்டி, முகத்தில் எல்லாம் பூசி மகிழ்ச்சியாக பிரியங்கா பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்கிறார். மேலும் அந்த காணொளியை அவர் ஒரு மாதம் கழித்து தற்போதுதான் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த காணொளியில் காமெடியன் பாலா உடன் பேசும் ஒரு பகுதியும் இடம் பெற்று இருக்கிறது. தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது, அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாமென இருக்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார் பிரியங்கா.

அதற்கு பதில் சொன்ன பாலா "மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது" என கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார்.

இந்த விடயம் தற்போது ரசிகர்களிடத்தே பிரியங்கா விலக போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement