சின்னத்திரையில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்து இன்று தமி சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த ஒருவரே ரேகா நாயர். அந்தவகையில் இவர் பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த 'இரவின் நிழல்' என்ற படத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்ததன் காரணமாக சிறுது காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்திருந்தார்.
ரேகா நாயரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பல தரப்புக்களிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் இருந்தன. அதிலும் குறிப்பாக இவரை அரை நிர்வாண நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.
பயில்வான் ரங்கநாதனின் விமர்சனங்களால் கடுப்பான ரேகா நாயர், சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு நடைபயிற்சி செய்ய வந்த பயில்வான் ரங்கநாதனை நடு ரோட்டில் அடிக்க பாய்ந்ததும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் சமீப காலத்தில் சர்ச்சைக்குரிய நாயகியாக ஒரு சிலரால் பார்க்கப்பட்டு வந்தார்.
இவ்வாறு பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத ஒரு நடிகையாக வலம் வரும் ரேகா நாயர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து மிகவும் உருக்கமாக பேசியிருக்கின்றார்.
அதாவது “நான் பாரதிராஜா சாரை அவ்வப்போது பார்த்து பேசுவேன். அப்போதெல்லாம் அவர் என்னிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், அது என்னவெனில், ஏன்டி நான்லாம் படம் பண்ணும்போது நீ இல்ல. அப்பல்லாம் ஏன் நீ என்ன வந்து பாக்கல. நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-னு சொல்வார்" எனக் கூறியிருந்தார் ரேகா நாயர்.
மேலும் அவர் பேசுகையில் "எனக்கு நன்றாக தெரியும் இப்போ நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லைன்னு. பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ், பாலசந்தர் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் நான் சினிமாவுக்கு வந்திருந்து, அப்போது எனக்கு ஒரு 20 முதல் 25 வயசு வரை இருந்திருந்தால் நான் நிச்சயம் ஹீரோயின் ஆகிருப்பேன்" எனவும் உருக்கமாக பேசியிருந்தார் ரேகா நாயர்.
Listen News!