• Sep 20 2024

அதனால தான் இதெல்லாம் நடக்குது... தற்கொலை குறித்து மனதை உருக்கும் வகையில் பேசிய விஜய் ஆண்டனி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 16 வயதான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். 


அந்தவகையில் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு கொண்டதாகவும், பின்பு அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி தற்கொலை எண்ணம் எதனால் வருகிறது என்பது பற்றி பேசி இருக்கிறார். அந்தவகையில் அவர் பேசுகையில் "தற்கொலை எண்ணம் நிறைய பேருக்கு வருதுனு கேள்விப்பட்டேன். அது நிறைய பேருக்கு அது பண பிரச்சனையால வருது. அதேபோல அதிகமாக நம்பிக்கையை யார் மேலயாவது வச்சிட்டு, அவங்க ஏமாத்தும் போது வருது" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "அதிகமாக தற்கொலை எண்ணம் ஸ்கூல்ல தான் நடக்குது. அதாவது படிப்பினால் வரக்கூடிய அழுத்தத்தால் நடக்குது. பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்த உடனே நாங்களும் டியூசன் போனு சொல்றோம். அவங்க ஸ்கூல்லயே படிச்சிட்டு தான் வர்றாங்க, எப்போதும் அவர்களை ஏளனமா பார்க்குறோம், சிந்திக்கவே டைம் இல்லாமல் பண்ணுறோம்.

ஆகவே பெற்றோர்கள். பிள்ளைகளை கொஞ்சம் ப்ரீ ஆக விடுங்க, நீங்க உங்கள லவ் பண்ணாலே இதெல்லாம் வராது" எனவும் கூறியுள்ளார். இவ்வாறாக அடுத்தவங்க குழந்தைகள் மேல் அக்கறை கொண்டு அட்வைஸ் பண்ணிய விஜய் ஆண்டனியின் மக்களுக்கா இப்படி ஒரு நிலை எனக் கேட்டு ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement