விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
இந்த சீரியலில் தற்பொழுது அபியும் வெற்றியும் திருவிழா கொண்டாடுவதற்காக தங்களுடைய பூர்வீக ஊருக்குக் சென்றுள்ளனர்.இதனால் அங்கு உள்ளவர்கள் அபியையும் வெற்றியையும் சிறப்பாகக் கவனித்திருந்தார்கள்.
இதனை அடுத்து அபிக்கும் வெற்றிக்கும் மாலை அணிவித்து கோயிலில் மரியாதை செலுத்தியிருந்தனர். அப்போது கண்மணி ரௌடிகளை செட் பண்ணி வெற்றி திருமணம் செய்த பல நாட்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை இவன் ஆம்பிளையா என்று அவமானப்படுத்துகின்றார்.
இதனால் கோபமடைந்த அபி அவன் ஆம்பிளையா இல்லையா என்று நான் தான் சொல்லனும் என்று சொல்லி அடிக்கின்றனர். அப்போது வெற்றியின் அம்மா வந்து உன்னால தான் என் பையனை அப்பிடி எல்லாம் கேட்கிறாங்க என்று அசிங்கப்படுத்துகின்றார். இதைப் பார்த்து கணமணி சிரிக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!