• Sep 20 2024

கணவனுடன் தொடர்பில் இருந்த நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்- தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல ஒடியா நடிகர் பாபுசன் மொகந்தி. இவர் பிரபல நடிகையான பிரக்ருதி மிஸ்ரா என்பவருடன் தொடர்பில் இருப்பதாக கூறி இவரது மனைவியான திருப்தி சதபதி இருவரையும் நடுரோட்டில் வைத்து தாக்கினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

அதாவது திருப்தி தனது கணவர் பிரக்ருதியுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து இருவரையும் போஃலோ பண்ணும் போது இருவரும் காருக்குள் தகாத உறவில் இருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

பிரக்ருதியை வெளியே இழுத்து சரமாரியாக அடித்தார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய பிரக்ருதியை பின்னால் விரட்டி சென்று 'என் குடும்பத்தை நாசம் செய்து விட்டியே' என்று கத்தியபடி தாக்கினார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரக்ருதி மிஸ்ரா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பதிலுக்கு திருப்தியும் பிரக்ருதி மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரக்ருதியிடம் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பிரக்ருதி பெற்றோர் முன்னிலையில் ஒருமணி நேரம் இந்த விசாரணை நடந்தது. நடிகர் பாபுசனுடன் உள்ள உறவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி போலீசார் விசாரித்தனர். திருப்தி சதபதி அளித்த புகாரின்பேரில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதன் விசாரணை விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement