• Sep 21 2024

திடீரென மரணமடைந்த தீவிர ரசிகர்...நேரில் சென்று ஜெயம் ரவி செய்த செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகர் ஜெயம் ரவி.தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.

இதனை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்தார். இத் திரைப்படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். காதலும் ஆக்ஷனும் சேர்ந்து நடிப்பில் வெளிக்காட்டும் நடிகர் ஜெயம்ரவி ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

படங்களில் பிஸியாகி நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தொடர்ந்து அகிலன் என்ற படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஜெயம்ரவியின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் திடீரென மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த நடிகர் ஜெயம்ரவி உடனடியாக அவரது சொந்த ஊருக்குச் சென்று அவரது குடும்பத்தை சந்தித்து செந்திலின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதுமட்டுமின்றி குடும்பத்தினரை சந்தித்து நடிகர் ஜெயம் ரவி செந்திலின் உடன் பிறந்தவர்களுக்கான படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்பதாக உறுதி அளித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement