• Sep 20 2024

அந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்த 'பீஸ்ட்' பட வில்லன்... விமானிகள் எடுத்த அதிரடி முடிவு.. வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் தான் 'பீஸ்ட்'. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடி வசூலை ஈட்டினாலும், விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் கடும் சறுக்கலை சந்தித்தது. 


எது எவ்வாறாயினும் இப்படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகிபாபு, சதீஷ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இதில் வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் நடித்திருந்தார். 


இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் அவர் நடித்த முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படம் ரிலீசான பின்னர் படத்தில் தன்னை டம்மியாக காட்டிவிட்டதாகக் கூறி விமர்சனங்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இதற்காக மனதளவில் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் தற்போது பாரத் சர்க்கஸ் என்கிற மலையாள படம் வெளியாக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் ஷான் டாம் சாக்கோ. இவர் புரமோஷன் பணிகளை முடித்துவிட்டு துபாயில் இருந்து கொச்சி செல்வதற்காக விமானத்தில் ஏறியபோது, விமானிகள் அறை எனப்படும் காக்பிட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.


அவரின் இந்த திடீர் நடவடிக்கை அத்துமீறலாக கருதப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அவரை உடனடியாக விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். பின்னர் இதனைத் தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதோடு, அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


அதுமட்டுமல்லாது இவையெல்லாம் முடிந்த பின்னர் அவர் வேறு ஒரு விமானத்தில் கொச்சி செல்ல அனுமதிக்கப்பட்டாராம். இவ்வாறாக பிரபல நடிகர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement