தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் அண்மையில் இலங்கையின் நிலை குறித்து ஒரு பாடலையும் பாடி இருந்தார்.
இவ்வாறு படப்பிடிப்புகளில் படு பிஸியாக இருந்து வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இவ்வாறு இருக்கையில் டி ராஜேந்தர் விரைவில் நலம் பெற வேண்டி நடிகர் கூல் சுரேஷ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்துள்ளார்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!