சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்கள் பலர் விவாகரத்து செய்துகொள்வது வாடிக்கையாகவுள்ளது. அதுமட்டுமல்லாது முன்னணி நடிகர்கள் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளதாக போலியான செய்திகளும் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகிறது. உதாரணமாக அண்மையில் விஜய்-சங்கீதா ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக போலித் தகவல் ஒன்று கசிந்தது.
இதனையடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது அவை யாவும் வெறும் வதந்தி தான் என்பதனை ரன்வீர் சிங் நிரூபித்துள்ளார். அதாவது சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் ரன்வீர் சிங், தீபிகாவுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பு மழையினைப் பொழிந்திருக்கின்றார். இது குறித்த வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!