இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் குணச்சித்திர நடிகர் பிறேம்குமார்.
இவர் சமீபத்தில் வழங்கியுள்ள நேர்காணலில் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டார் நீங்கள் இந்த படத்தில் நான் நடித்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என நினைக்கிற படங்கள் எதாவது இருக்கா என்று.
அப்போது அவர் அதைவிடுங்க நான் கடைசி கட்டத்தில் நடித்த படம் இருக்கு என ஒரு கதையை சொன்னார்.
நான் வேலையே இல்லாமல் நான்கு மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தேன், பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லை, வீட்டில் இருக்கிற வேலைக்காரர்கள் ஏதும் நினைப்பார்கள் என்ற பயத்தில் காரை எடுத்துக்கொண்டு பார்க்கிற்கு சென்றுவிட்டு அவர்கள் வீட்டைவிட்டு போனால் பிறகுதான் வீட்டுக்கு வருவேன் அப்படி நான்கு மாதங்கள் இருந்தேன்.
அப்போதுதான் ஒரு call வருகிறது, கன்னட படம் இருக்கு நடிக்கிறிங்களா date இருக்கா என்று, நான் மனதுக்குள் நினைத்தேன் நான் நாலுமாதமாக சும்மாதான் இருக்கிறேன் date இருக்கா என்று கேட்க்கிறாங்க என்று, இருங்க பார்த்திட்டு சொல்லுறேன் என சொல்லிட்டு சொன்னேன் ok இருக்கு எப்ப வரணுமென்று கேட்டேன்.
அப்போது அவர்கள் சொன்னார் நாளைக்கு என்று, ok எங்க வரணும் என்று என்று கேட்டபோது கம்போடியாவிற்கு என்று சொன்னார்கள், என்னது கம்போடியாவிற்கா நாளைக்கா என்று கேட்க ஓம் sir, பாஸ்ஸோர்ட் இருக்கா என கேட்டார்கள் எல்லாம் இருக்கு வாறேன் என கூறிவிட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு அந்த படத்தில் நடித்தேன் என்றார்.
Listen News!