சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் திடீரென இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கொல்கத்தாவின் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார்.
21 வயதிலேயே மாடலாக இருந்த வந்த இவர் கடந்த 25ந் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அத்தோடு அவரது வீட்டில் தற்பொலைக்கான காரணம் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார். அவருக்கு பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் பிதிஷா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரின் தோழியான மாடல் மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ள நிலையில், தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துள்ளார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிதிஷா இறந்த பிறகு அவர் பற்றியே மஞ்சுஷா பேசி வந்ததாகவும், பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என மஞ்சுஷா கூறி வந்ததாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். நடிகை தற்கொலையை தொடர்ந்து அவரது தோழியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!