விஜய் தொலைக்காட்சியில் இளம் ரசிகர்களைக் கவர்ந்த சீரியாக ஒளிபரப்பாகி வருவது தான் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடர் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.
காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக தொடர் அமைந்துள்ளது.இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் ஸ்வாதிநாதன் என இருவருக்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள்.
இப்போது கல்லூரி ஆசிரியர் சூர்யாவுடன் படித்தவர்களின் ரீயூனியன் நடைபெற்று வருகிறது.இன்று தொடரை முடிக்கும் போது புதிய நாயகியின் எண்ட்ரீ காட்டப்பட்டுள்ளது.
அதைப்பார்த்ததுமே நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை அஷ்வினி என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்துவிட்டார்கள்.அத்தோடு அஸ்வினி ஷிவானி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரைப் பார்த்ததும் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!