நடிகை ஒருவர் சினிமாவில் இருந்து கொண்டு ஓவர் சேட்டை செய்து கொண்டிருந்ததால் உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்காமல் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த நடிகைக்கு பிள்ளைப்பூச்சி போல் கணவர் அமைந்துவிட்டார்.
அத்தோடு திருமண வாழ்க்கை நன்றாக தான் போனது. ஆனால் அந்த நடிகைக்கு தான் அதை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லை. கணவரின் அனுமதியின்றி கருவை கலைத்து, அதன் பின்னர் சென்னைக்கு அம்மா அப்பாவை பார்க்க போகிறேன் என்று அமெரிக்காவில் இருந்து சொல்லிவிட்டு வந்தார்.
ஒரு மாதத்தில் திருப்பி வருகிறேன் என்று சொல்லி கடைசியில் வர முடியாதென்று, கணவருக்கு அலைபேசியில் சொல்லிவிட்டு இங்கே தனக்கு பிடித்த நடிப்புத் தொழிலை செய்து வந்தார். அத்தோடு கணவரின் அம்மா, அப்பா சென்னையில் இருக்க அப்பா தவறிவிட்டார். எனினும் அப்போது கணவர் இங்கு வந்து இருந்தால், அந்த இறப்பிற்கு கூட நடிகை செல்லவில்லை.
இனிமேல் கணவர் தொந்தரவு இருக்கக் கூடாதென முடிவு செய்து விவாகரத்து கேட்டார். அதன் பின்னர் பொய் சொல்லி அவரிடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டிருந்தால் அவர்கள் சொத்துக்களையும் கேட்க முயன்றார். மேலும் அவர் அமெரிக்காவில் நன்றாக இருக்கக் கூடாதென பல பிரச்சனைகள் செய்து பார்த்தார்.
ஆனால் கடைசிவரை கணவன் உண்மையாக இருந்ததால் நடிகையின் எந்த திட்டமும் எடுபடவில்லை. கணவர் ஜெயித்து விவாகரத்து கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். நாய் வாலை நிமித்த முடியுமா! அப்படித்தான் அந்த நடிகையும் கடைசி வரை கணவருக்கு அடங்காமலே போய்விட்டார். எனினும் அதன் பின்னர் நடிகை அவருக்கு பிடித்த சினிமா தொழிலை செய்து வருகிறார். அவருக்கு பிடித்த மாதிரி வளர முடியவில்லை. ஏதோ ஒரு சில படத்தில் நடித்து வருகிறார்.
Listen News!