• Sep 19 2024

அப்படியொரு ஆசையால் குடும்பத்தையே நாசமாக்கிய நடிகை.. கடைசியில் நிகழ்ந்த கொடுமை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் அம்புட்டு அழகாக இருக்கும் நடிகை ஒருவர் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் பொழுது அமைச்சருடன் தொடர்பில் இருந்ததால், அவருடைய சவகாசத்தை கட் பண்ண வேண்டும் என்பதற்காகவே அந்த நடிகைக்கு வீட்டில் திருமண ஏற்பாடு வேகமாக செய்யப்பட்டது.

சென்னையில் நடத்தினால் அமைச்சர் பிரச்சினை செய்வார் என்று மாப்பிள்ளை அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால், அமெரிக்காவிலேயே திருமணத்தை செய்து முடித்தனர். அத்தோடு திருமணத்திற்கு பின்னர் குடும்பம், குழந்தை குட்டி என அந்த நடிகை செட்டில் ஆகி விடும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

‘நாய் வாலை நிமித்த முடியுமா!’ அந்த நடிகை கிடைத்த நல்ல வாழ்க்கையை பயன்படுத்தி கொண்டு வாழாமல் தினம்தோறும் சண்டைகள் பிரச்சினைகள் என இருந்து வந்தார்.அத்தோடு  சினிமாவை நினைத்துக் கொண்டே இருந்தார். சின்ன பிள்ளை குச்சி மிட்டாய்க்கு ஆசைப்படுவது போல் ஒவ்வொரு நாளும் கணவருடன் அந்த நடிகை அழுது அடம் பிடித்திருக்கிறார்.

பாவம் அந்த மனுஷனும் எவ்வளவு நாள் தான் அமைதியா பொறுத்துக் கொள்வார். பொதுவாகவே நடிகையின் கணவர் மிகவும் நல்லவர். எனினும் அமைதியாக இதை பொறுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு குழந்தை பிறந்தால் வாழ்க்கை நன்றாக மாறிவிடும். என் மனைவி நானும் நன்றாக இருப்போம் என நம்பிக்கையுடன் இருந்தார். அதேபோல் நடிகையும் கருவுற்றார். ஆனால் அந்த கருவை கணவனிடம் கூட கேட்காமல் கலைத்து விட்டார் சண்டாளி.

மேலும் இதை தெரிந்த அந்த அப்பாவி கணவர் வாழ்க்கையே வெறுத்து விட்டார். இப்படியே நாட்கள் செல்ல நடிகை, நான் சீரியலில் மட்டும் நடிக்க போகிறேன். சினிமாவில் நடிக்க அல்ல. ஒரு மாதத்தில் திரும்பி அமெரிக்கா வருகிறேன் என பொய் சொல்லி சென்னை வந்தார்.அவர் சொன்ன பொய்யையெல்லாம் கணவரும் நம்பி அனுப்பி விட்டார்.

அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு அந்த அப்பாவி கணவருக்கு அந்த நடிகை போன் செய்து இனிமே நான் வரமாட்டேன்.அத்தோடு என்னை எதிர்பார்க்க வேண்டாம் என கணவனையும் தூக்கி எறிந்து விட்டார். நடிப்பிற்காக கணவரிடம் பொய் பித்தலாட்டம் செய்து சென்னை வந்த நடிகை இப்போது பட வாய்ப்பு இல்லாமல் தனியாக சுற்றி வருகிறார்.

Advertisement

Advertisement