தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. இதனை தொடர்ந்து மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
இடையில் இவருக்கு காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போக திருமணம் என பல சர்ச்சைகளிலும் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மீண்டும் தன் இடத்தினை பிடிக்க தற்போது படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. அத்தோடு 39 வயதை எட்டிய திரிஷா இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்க நட்சத்திரங்களின் விவாகரத்து செயல்களால் தான் செய்யவில்லை என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அதெல்லாம் இல்லை குடிக்கு அடிமையாகி பார்ட்டி ஆண் நண்பர்கள் சகவாசம்,நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் குடித்துவிட்டு பிரச்சனை என்று திரிந்ததால் தான் திரிஷாவுக்கு மார்க்கெட்டும் திருமணமும் ஆகவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் பல வீடியோக்களில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். எனினும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை திரிஷா ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் எல்லோரும் திமிரு பிடித்தவர்கள். தேவையில்லாமல் இரு நடிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்டு பார்ப்பவர்கள். அத்தோடு சிலர் சர்ச்சைகளால் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனினும் அதையெல்லாம் நான் தேவையில்லாமல் கண்டுக்கொள்ள மாட்டேன். வேற வேலையே இல்லையா. இவ்வளவு நெகட்டிவிட்டி எதுக்கு. அனாவசியமாக ஏன் பேசுறீங்க என்று திரிஷா பதிலளித்துள்ளார்.
Listen News!