சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பூவே உனக்காக சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி.இந்த சீரியல் மூலமே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்த சீரியலுக்கு பிறகு முன்னணி தொலைக்காட்சிக்காக தயாராகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். அக்கா - தங்கை கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் அக்கா கேரக்டரில் நிவிஷாவும், தங்கை கேரக்டரில் ராதிகா ப்ரீத்தியும் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தங்கை கதாபாத்திரம் சீரியலின் ஹீரோயின் என்று கூறியுள்ளனர். இதை நம்பி சீரியலில் இணைந்த ராதிகா ப்ரீத்தி, சில நாட்கள் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வந்தார். ஆனால் தங்கை கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்பது நடிக்கும்போது தெரிய வந்திருக்கிறது.
அதனால் ராதிகா ப்ரீத்தி சீரியலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் புதிய சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என்று நம்பப்படுகின்றது.
Listen News!