ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஒருவர் தான் நடிகர் சரத்பாபு. இவரின் திரை வாழ்க்கை ரொம்பப் பிரகாசமாக இருந்தாலும் அவரின் திருமண வாழ்க்கை ரொம்பப் பிரச்சினையாகவே இருந்தது.
இந்நிலையில் சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள சரத்பாபு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இருப்பினும் இரு தினங்களுக்கு முன்னர் சரத்பாபு உயிரிழந்ததாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. ஆனாலும் இது வதந்தி என பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறான வதந்திகளுக்கு மத்தியில் சரத்பாபுவின் பிளாஷ்பேக் ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது 70, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரமா பிரபா என்பவர் தன்னைவிட 5 வயது குறைந்த சரத்பாபுவை காதலித்து வந்துள்ளார். சரத்பாபுவும் அவரும் 14 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.
இருப்பினும் ரமா பிரபாவிடம் இருந்த சொத்துகளை சரத்பாபு ஏமாற்றி வாங்கிவிட்டதாகவும் அந்தக் காலத்தில் வெளியாகி இருந்தது. மேலும் ரமாபிரபா வயது குறைந்த சரத்பாபுவை விரும்பியதால் இன்று தள்ளாத வயதில் தனியாக வசித்து வருகிறாராம்.
அந்தவகையில் சென்னையின் மிக முக்கியமான ஏரியாவில் விலை மதிப்புமிக்க சொத்துக்கு உரிமையாளராக இருந்த ரமா பிரபா, சரத்பாபுவிடம் தனது சொத்துகள் முழுவதையும் இழந்து இருக்கின்றார். ஆனாலும் இவ்வளவு நடந்தும் சரத்பாபுவுக்கு உடல்நலம் சரியில்லை என தெரிந்த வுடன் ரமா பிரபா ரொம்பவே தவித்து போனாராம்.
அதுமட்டுமல்லாது ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தன்னுடன் இணைந்திருந்த சரத்பாபு, பெரிய நடிகரானதும் ஒதுங்கி விட்டதாக ரமா பிரபா தெரிவித்துள்ளார். அந்தவகையில் தன்னை விட 5 வயது குறைந்த சரத்பாபுவை உருகி உருகி காதலித்த ரமா பிரபாவுக்கு கடைசியில் ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்துள்ளது.
மேலும் சரத்பாபுவும் ரமா பிரபாவும் இறுதியாக பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்நிலையில், சரத்பாபுவால் அனைத்து சொத்துக்களையும் இழந்த ரமா பிரபாவுக்கு தெலுங்கு இயக்குநர் ஒருவர் ரகசியமாக உதவியுள்ளார். அதாவது 'பத்ரி, தம், எம்.குமரன் S/o மகாலக்ஷ்மி, போக்கிரி' படங்களின் தெலுங்கு ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பூரி ஜெகன்நாத் தான் உதவியுள்ளார்.
நடிகை ரமா பிரபா நடிக்க வாய்ப்புகள் அமையாமல் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டத்தில் இருந்துள்ளார். மேலும், சரத்பாபுவையும் பிரிந்து சொத்துக்களையும் இழந்திருந்த நேரம் அது. அப்போது தனது பத்ரி படத்தில் 5 நாட்கள் மட்டுமே ரமா பிரபாவை நடிக்க வைத்துள்ளார் பூரி ஜெகன்நாத். அதன் பின்னர், ரமா பிரபாவின் போன் நம்பர், அட்ரஸ் வாங்கிக்கொண்டு அவரை அந்த இயக்குநர் திருப்பி அனுப்பிவிட்டாராம்.
இவ்வாறாக சொத்துக்களை இழந்த ரமா பிரபாவும் ஹைதராபாத்தை காலி செய்துவிட்டு மதனப்பள்ளி என்ற ஊரில் தனது தம்பியுடன் வீடு கட்டி வசித்து வந்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் 20,000 ரூபாய் யாரோ அனுப்பியுள்ளார்கள். இது ஒவ்வொரு மாதம் தொடரவே ரமா பிரபாவுக்கு இந்தப் பணத்தை யார் அனுப்புகிறார்கள் என்ற சந்தேகம் வந்துள்ளது.
பின்னர் இறுதியாக இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் தனக்கு ஒவ்வொரு மாதமும் 20000 ரூபாய் பணம் அனுப்புவது தெரியவந்துள்ளது. 2000ம் ஆண்டு முதலே மாதம் தவறாமல் பணம் அனுப்பியுள்ளார் பூரி ஜெகன்நாத். நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நேரத்தில் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!