• Sep 20 2024

மாரி செல்வராஜ் மீது கடும் கோபத்தில் இருந்த நடிகை- மாமன்னன் படம் கொடுத்த சக்சஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் இயகக்குநர் மாரி செல்வராஜ்.இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

மூன்றாவது படமாக மாமன்னனை இயக்கினார். வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இதுவரை தமிழ் சினிமா தொடாத கதைக்களத்தை தொட்டு தனது வித்தையையும் இறக்கி மாமன்னன் படத்தை மெகா ஹிட் படமாக மாற்றிவிட்டார் மாரி செல்வராஜ். 


இந்நிலையில் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்த ரவீனா சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மாமன்னன் படத்துக்காக மொத்தம் 17 நாட்கள் ஷூட்டிங் சென்றேன். நான் வசனம் பேசும் காட்சிகளிலும் நடித்தேன். ஆனால் அதை மொத்தமாக இயக்குநர் வெட்டி தூக்கிவிட்டார். அதனால்தான் என்னுடைய கேரக்டருக்கு வசனம் எதுவுமே படத்தில் இல்லை.

அதுகூட பரவாயில்லை என்னுடைய கேரக்டருக்கு பெயர்கூட இல்லை. படம் வெளியான பிறகு அதை பார்த்த எனக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மீது கடுமையான கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் எனது கதாபாத்திரம் நன்றாக ரீச்சாகிவிட்டதால் அந்த கோபம் வருத்தமெல்லாம் போய்விட்டது" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement