• Sep 20 2024

எழில் கொடுத்த அறிவுரை.. மீண்டும் ராதிகா வீட்டிற்கு சென்ற கோபிக்கு ஏற்பட்ட சிக்கல்–இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இவ்வாறு இருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்…காலையில் விடிந்ததும் கோபி கண் முழித்து என்ன நடந்தது எனத் தெரியாமல் தலைவலியில் தவிக்கிறார். ராதிகா போன் பண்ணி இருக்காளா என போன் எடுத்து பார்க்க ராதிகாவிடம் இருந்து எதுவும் வரவில்லை.

மேலும் இப்படியான சூழலில் எழில் ரூமுக்கு வந்து உங்களுக்கு என்னப்பா ஆச்சு? எதுக்கு இப்படி குடிச்சுட்டு வந்தீங்க? உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு அது எனக்கு நல்லா புரியுது ஆனா குடிச்சுட்டு வருவதால் அந்தப் பிரச்சனை மாறப்போவதில்லை. அதை எப்படி சரி பண்ணலாம்னு யோசிங்க. மேலும் உங்க ப்ரண்டு நீங்க புல்லா குடிச்சுட்டு கார் ஓட்டிட்டு வர்றப்போ அம்மாவுக்கு போன் பண்ணு சொன்னதும் அவங்க பதறிப்போய் நடுராத்திரில ரோட்ல வந்து நின்னுகிட்டு இருந்தாங்க என சொல்ல கோபி மன்னிப்பு கேட்கிறார். கொஞ்சம் அம்மாவை நினைத்து பாருங்க என கூறுகிறார் எழில்.

அதன்பின்னர் ரொம்ப தலைவலியா இருந்தா லெமன் ஜூஸ் குடிங்க மோர் குடிங்க சரியாகிடுமென சொல்ற இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் எனக் கேட்க இதெல்லாம் தெரிஞ்சிக்க குடிக்கணும்னு அவசியம் இல்லை என கூறுகிறார். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்க அப்போது கீழே இறங்கி வந்த கோபி கொஞ்சம் காபி கேட்க இந்த நேரத்துல காப்பி எதுக்கு என ஈஸ்வரி கேட்கிறார். உன் முகமே சரியில்லை என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா என கேட்கிறார். மேலும் கொஞ்சம் டயர்டா இருக்கு தலைவலியா இருக்கு என கூறுகிறார்.

எனினும் இதன் பின்னர் பின்னர் பாக்கியாவிடம் காபி வேண்டாம் மோர் கொடு என கூறுகிறார். பிறகு பாக்கியா மோர் எடுத்துக்கொண்டு கொடுக்கிறார். பாக்யாவின் முகம் ஒரு மாதிரி இருக்க என்ன உளறினோம்னு ஒன்னும் தெரியவில்லையே என கோபி யோசித்துப் பார்க்க அவருக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை. பிறகு நைசாக இங்கிருந்து கிளம்பி ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

அதன் பின்னர் கோபி வீட்டில் பெல் அடிக்க மய்யூ கதவைத் திறக்கிறார். பின்னர் கோபி உள்ளே சென்றதும் உங்களுக்கும் அம்மாவுக்கு ஏதாவது சண்டையா அவங்க ரொம்ப சேடா இருந்தாங்க. என்கிட்டே சிரிச்சு கூட பேசல என்னாச்சு என கேட்க அம்மா எங்க இருக்கா என கோபி கேட்கிறார். இந்த நேரத்தில் கிச்சனிலிருந்து ராதிகா வந்துவிட இங்க எதுக்கு வந்தீங்க என சத்தம் போடுகிறார்.

நீங்க யாரு? இங்க எதுக்கு வரணும் என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. மேலும் அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் டீச்சர் உங்களுடைய மனைவி என்பதை மறைத்து என் கிட்ட எப்படி உங்களால் நடிக்க முடிந்தது என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement