பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியில் 2017-ஆம் ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி.
இதற்கு முன் இவர் ஒரு நர்ஸாகவே பணியாற்றியிருந்தார். அதன் பின்னர் 2017-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக் கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு இவர் எழுப்பிய வீர வசனங்களால் 'வீரத் தமிழிச்சி' எனப் பலராலும் கொண்டாடப்பட்டார்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரதும் வெறுப்பினைப் பெற்றார். பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியதோடு ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கின்றார். மேலும் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
இதற்குப் பின்னர் நிறைய போட்டோ ஷூட்கள், வீடியோக்கள் எடுத்து பிஸியாக இருந்த ஜூலி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தற்போது புதிய விடயம் ஒன்றிலே இறங்கியுள்ளார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தவமாய் தவமிருந்து' என்ற சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கின்றார்.
இந்த தகவல்களைக் கேள்விப்பட்ட ஜூலியின் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தோடு இருப்பது மட்டுமல்லாமல் அவரை சீரியல் நடிகையாகவும் நடிக்குமாறு கூறி வருகின்றார்கள்.
Listen News!