தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 10போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
இவ்வாறுஇருக்கையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர். தற்போது கதிரவன், மைனா நந்தினி ஆகியோர் ஆசிரியர்களாகவும், அமுதவாணன் பிரின்சிபால் ஆகவும் வருகிறார்.
அத்தோடு மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டில் வலம் வரும் சூழலில், அசிம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் முழுக்க முழுக்க பார்வையாளர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.
இதற்கு காரணம், தனலட்சுமியை காதலிப்பதாக அவர் பின்னால் ஒரு ஜாலி மாணவனாக அசிம் வலம் வருவது தான். கதிரவன் ஆசிரியராக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, தனலட்சுமி, விக்ரமன், ஷிவின், ரச்சிதா, ADK, அசிம், மணிகண்டா ஆகியோர் மாணவ மாணவிகளாக வகுப்புகளை கவனித்து கொண்டிருக்கின்றனர்.
எனினும் அந்த சமயத்தில், தனலட்சுமி பின்னால் இருக்கும் அசிம், வரை Sugi என அழைத்து காதல் கடிதம் ஒன்றை எழுதி தனா கையில் கொடுக்கிறார். இதனை அறிந்ததும், கோபத்தில் சார் என கத்தி கதிரவனிடம் தனலட்சுமி போட்டுக் கொடுக்க, கடிதத்தில் இருந்த வரிகளை படித்து அசிமையும் அவர் கிண்டல் செய்கிறார். "நான் உன்னை காதலிக்கிறேன்" என எழுதுவதற்கு பதிலாக, "நான் என்னை காதலிக்கிறேன்" என்றும் அசிம் எழுதி வைத்ததாக தெரிகிறது.
இதன் பின்னர், தொடர்ந்து தனலட்சுமியிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போல அசிம் அவரை சுற்றி சுற்ற வந்த பின்னரும் தனா கண்டு கொள்ளவே இல்லை என தெரிகிறது. இப்படி நாள் முழுக்க தனலட்சுமியை சுற்றி சுற்றி அசிம் ஸ்கோர் செய்துள்ள நிலையில், ஒரு கட்டத்திற்கு பின்னர் "நீ என்னை காதலிக்கவில்லையா?" என தனலட்சுமியிடம் அசிம் கேட்க இல்லை என்றும் பதில் சொல்கிறார். இனிமேல் நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என அசிம் கூறியதும், "நான் ஒத்துக்கவே இல்லை, அப்புறம் எப்படி பிரேக் அப் ஆகும்?" என்றும் தனலட்சுமி ஜாலியாக கேள்வி கேட்கிறார்.
மேலும் இப்படி பள்ளிக்கூட டாஸ்க்கில் அசிம் மற்றும் தனலட்சுமி ஆகியோரிடையே நடந்த Performance பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
Listen News!