• Sep 20 2024

மிகப்பெரிய அறிவிப்பு நாளை காத்திருக்கு….எதிர்பார்ப்பை தூண்டி விட்ட வெங்கட்பிரபு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் வகையில் பல படங்களைத் தொடர்ந்து வழங்கி வருபவர் இயக்குநர் வெங்கட்பிரபு. இவர் தற்போது தனது திரைப்பயணத்தில் 15 ஆண்டுகால அனுபவத்தை நிறைவு செய்துள்ளார். இவர் இயக்கும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி இவர் இயக்கிய "மாநாடு" திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனை அடுத்து நடிகர் அசோக் செல்வனை வைத்து இவர் இயக்கிய "மன்மத லீலை" திரைப்படமும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு தற்போது நடிகர் நாகசைதன்யாவுடன் இணையும் இருமொழி படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் அறிவிப்பு தொடர்பான புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தன. ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் இளையராஜா-யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது வெங்கட்பிரபு சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து இருக்கின்றார். அதில் "நாளை காலை 9.01 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு" எனத் தெரிவித்து இருக்கின்றார்.

இது வெங்கட்பிரபுவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது படப்பிடிப்பு தொடங்கும் அப்டேட் அல்லது இளையராஜா இசையமைப்பது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement