• Sep 20 2024

"நான் அவரை நேசிக்கிறேன்" என கூறிய சிறுவன்..வெட்கத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா

tech / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து அனில் சர்மாவின் தி ஹீரோ, லவ் ஸ்டோரி என பல படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக திகழ்பவர். இவர் தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய எதார்த்தமான நடிப்பினால் இவர் பிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது, பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை பெற்று சினிமாவை கலக்கி வந்தார்.

இவ்வாறு சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா பின்னர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தன்னை குறித்து சிறுவன் ஒருவன் தெரிவித்த கருத்திற்கு பிரியங்கா சோப்ரா பகிர்ந்த பதிவு, மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு கருத்துக்கணிப்பு பிறகு உலகின் இரண்டாவது அழகான பெண்மணியாக பிரியங்கா சோப்ரா அறிவிக்கப்பட்டது தொடர்பான செய்தி ஒன்றைப் பார்த்துக் கொண்டே இருக்கும் சிறுவன் ஒருவன் சிரித்த முகத்துடன் பிரியங்காவை பார்த்து "நான் அவரை நேசிக்கிறேன்" என கூறுகிறார். இதுகண்டு அந்த சிறுவனின் தாயார், ஏன் பிரியங்காவை நேசிக்கிறாய் எனக் கேட்க, "ஏனென்றால் பிரியங்கா சோப்ரா அழகாக இருப்பதால்" என வெட்கத்துடன் சிரித்தபடி கூறுகிறார் அந்த சிறுவன்.

பிரியங்கா சோப்ராவை நேசிப்பதாக சிறுவன் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே இருக்கும் டிக் டாக் வீடியோவை நடிகை பிரியங்காவின் கவனித்தார். இதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா " கிரேட் டேஸ்ட் மை ஃப்ரண்ட்" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement