• Sep 21 2024

கேஜிஎஃப் ராக்கி பாயால் கவரப்பட்டு சிகரெட் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியை பெற்ற திரைப்படம் தான் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. இப்படத்தை இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் மூலம் யாஷ் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார். இந்த படத்தில் ராக்கியின் தோற்றம் மற்றும் அவரின் உடல்மொழி ஆகியவை ரசிகர்களைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ராக்கி பாயால் வெகுவாகக் கவரப்பட்டு அவரைப் போலவே ஸ்டைலாக கெத்தாக இருக்கவேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக கேஜிஎஃப் படத்தில் யாஷ் தொடர்ந்து சிகரெட்கள் குடிப்பது போல அவரும் பெற்றோருக்கு தெரியாமல் சிகரெட் குடித்துள்ளார்.

இதனால் அவர் உடல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ள சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். இப்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்ட அவரிடம் மருத்துவர்கள் விசாரணை நடத்தியபோது அவர் இந்த விவரங்களைக் கூறியுள்ளார். இந்த செய்தி மருத்துவர்களுக்கும் அவரின் பெற்றோருக்கும் மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement