அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் ரிலீஸானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அத்தோடு அதிகாலை 1 மணிக்கே FDFS காட்சி திரையிடப்பட்டதால் வசூலும் மாஸ் காட்டியதாக தெரிகிறது.
அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக விஜய்யின் வாரிசும் இன்று ரிலீஸானது. அதிகாலை 4 மணி காட்சியுடன் திரைக்கு வந்த வாரிசு படத்துக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்தாண்டு ஆரம்பமே கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மரண மாஸ் காட்டியுள்ளது. அத்தோடு அடுத்த வாரம் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறையும் இருப்பதால், இரண்டு படங்களின் வசூலும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு துணிவு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமாக இணையத்தில் லீக்கானது திரையுலக பிரமுகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் துணிவு படக்குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் துணிவு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. மேலும் இதுகுறித்து படக்குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
துணிவு படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பார்க்க முடிகிறது. இதனால் பொங்கல் விடுமுறை தினங்களில் கிடைக்கும் கலெக்ஷனையே படக்குழு நம்பியுள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது, படக்குழுவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு எவ்வளவு தான் முயன்றாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
Listen News!