விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து தற்பொழுது 50 நாட்களைத் தாண்டியுள்ளது. இருப்பினும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் இப்போதுவரை ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து வாரா வாரம் ஒருவர் வெளியேறுவது வழமை. அந்தவகையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குயின்ஷி வெளியேறினார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு முடிச்சுடன் இரண்டு கயிறு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கையாலும் ஒவ்வொரு கயிற்றைப் பிடித்த வண்ணம் மற்றவர்களின் கயிற்றை இவர்கள் அவிழ்க்கலாம்.
அதில் இறுதிவரை நிப்பவரே இந்த வாரத் தலைவர் ஆவார். அந்தவகையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவின் படி இறுதியாக மணிகண்டன், மற்றும் தனலட்சுமி ஆகியோரே கயிற்றில் தொங்கிய வண்ணம் நிற்கின்றனர். இறுதியில் யார் தலைவர் ஆவார் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!