• Sep 20 2024

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி வீட்டில் நடந்த கொண்டாட்டம்- வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

செந்தில்-ராஜலட்சுமி இருவரும்  தங்களது வீட்டில் ஏற்பாடு செய்த விழாவில் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாவில் பதிவேற்றி உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.

ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது வித்தியாசம் காட்டுவார்கள். அப்படி ஒவ்வொரு சீசனிலும் கானா பாடல் கலைஞர்களை நிகழ்ச்சியில் கொண்டு வருவது வழமை.

அந்த வகையில் ஒரு சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி அந்த சீசனையும் வெற்றிக்கண்டவர் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமியும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர்.எனினும்  சமீபத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்க வெளியான புஷ்பா படத்தில் வாயா சாமி என்ற பாடலை ராஜலட்சுமி பாட பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.



அண்மையில் செந்தில்-ராஜலட்சுமி இருவரும் தங்களது குழந்தைகளுக்கு காதணி விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்த விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு.கவிதா ராமு கலந்துகொண்டாராம். இதனை அவர்களே தங்களது பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.







Advertisement

Advertisement