• Sep 20 2024

நடிகை வாணிஸ்ரீஸ்க்கு 20 கோடி நிலத்தை மீட்டெடுத்த கொடுத்த பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை, போலி பத்திரப்பதிவு மூலம் வேறொருவர் எடுத்து கொண்ட நிலையில், அந்த நிலம் புதிய சட்டத்தால் மீட்டெடுக்க பட்டுள்ளதற்கு கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காலத்தில் அழியாத திரைப்படங்களான 'வசந்த மாளிகை', 'வாணி ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான்  பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட  பல மொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

 கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, வெங்கடேஷ் கார்த்தி என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.



இன்னும் மகனின் மறைவில் இருந்து மீளமுடியாமல் நடிகை வாணி ஸ்ரீ தவித்து வரும் நிலையில், இவருக்கு சொந்தமாக சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் 3 கிரவுண்ட் 1902 சதுர அடி இருந்த நிலத்தை, ஒருவர் போலி பத்திரப்பதிவு மூலம் தனதாக்கி கொண்டார். இவ்வாறுஇருக்கையில்  தன்னுடைய நிலத்தை மீட்க அவர் போராடி வந்த நிலையில்,  புதிய சட்டத்தால் மீண்டும் இழந்த நிலத்தை மீட்டெடுத்துள்ளார்.



அத்தோடு தலைமைச் செயலகத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை, முதல்வர் ஸ்டாலின்  ஆரம்பித்து வைத்தார். தொடங்கி வைத்த முதல் நாளிலேயே போலி பத்திரப்பதிவால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கு, இந்த நிலத்தை முதல்வர் மீட்டு கொடுத்துள்ளார். அத்தோடு சுமார் 20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் மூலம் மீட்டு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்த முதல்வருக்கு வாணிஸ்ரீ கண்ணிக் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement