• Sep 20 2024

உலகிலேயே 5வது விலையுயர்ந்த வைரத்தினை தமன்னாவுக்கு பரிசளித்த பிரபலம்- அடடே இவர் தான் கொடுத்தாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்த இவருக்கு தற்போது தமிழில் அந்த அளவுக்கு மவுசு இல்லை. இதனால் உஷாராக பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, அங்கு அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்த வண்ணம் உள்ளார்.

தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் இவர் ஆடிய காவாலயா என்னம் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.


அந்த பாடல் ஹிட்டாக ரீல்ஸ் வீடியோவில் செம டிரண்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் நடிகை தமன்னா குறித்த ஒரு பழைய விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது அவருக்கு உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள வைரம் தமன்னாவிற்கு பரிசு கிடைத்துள்ளது.


உலகிலேயே 5வது விலையுயர்ந்த வைரத்தினை தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா பரிசாக அளித்துள்ளார்.சிரஞ்சீவியின் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் தமன்னா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படம் படு வெற்றியடைந்ததால் உபாசனா இந்த பரிசினை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement