• Sep 20 2024

எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட கதாபாத்திரம்! யார் தெரியுமா?அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  


ஒவ்வொரு வாரமும், டிஆர்பி-யில் மற்ற சீரியல்களுக்கு டப் கொடுத்து வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து, தற்போது முக்கிய பிரபலம் ஒருவர் அதிரடியாக வெளியேறியுள்ளது மட்டுமின்றி, அவரின் கதாபாத்திரம் இனி சீரியலில் இடம்பெறாது என கூறப்படுகிறது.


கதாநாயகி ஜனனியின் மாமன் மகளாக வாசுகி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷ்ணவி.துறுதுறுப்பான மற்றும் தைரியமான பெண்ணாக இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியல் சென்று கொண்டிருக்கும் கதைக்களத்திற்கு இவருடைய கதாபாத்திரம் பயன்படாத காரணத்தால், இவரை சீரியலில் இருந்து ஒரேடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement