• Sep 20 2024

இயக்குநரால் இழுபட்டுக் கொண்டே போகும் கோப்ரா திரைப்படம்- ரெட் ஜெயன்ட் மூவிஸ் எடுத்த அதிரடி முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் விக்ரம். இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் கோப்ரா ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதனால் கோப்ரா படத்தை தான் நம்பியும் இருகின்றாராம்.

அத்தோடு கோப்ரா படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளாராம்.ஆனால் கோப்ரா படம் இழுத்துக் கொண்டே போகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதத்திற்கு முன்பே முடிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இப்பொழுதும் இயக்குநர் வி எப் எக்ஸ் வேலைகள் இருக்கிறது என்று இழுத்தடிக்கிறார். இதனால் அறிவித்த தேதியில் கோப்ரா படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் இயக்குநரை ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் அழைத்து சென்றுள்ளது.

அதாவது கோப்ரா படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றியுள்ளது. இதனால் இயக்குநரிடம் உதயநிதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார். கடைசியாக கோப்ரா படத்தின் இயக்குநர் ஆகஸ்ட் 20 க்குள் படத்தை முடித்து தருகிறேன் என கூறியுள்ளாராம்.

அதற்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் சம்மதித்து உள்ளதாம். இதனால் தற்போது முழு வீச்சாக கோப்ரா படத்தின் வேலையில் ஈடுபட்டு வருகிறாராம் அஜய் ஞானமுத்து. இதனால் மிக விரைவில் கோப்ரா படம் ரிலீசுக்கு தயாராகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சின்னத்திரை பிரபலங்களான நிஷா மற்றும் கணேஷின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- இவ்வளது பெரிதாக வளர்ந்து விட்டாரா?

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement