லியோ திரை படம் இன்று வெளியானதை அடுத்து பட்டிதொட்டி எங்கும் லியோ, லியோ என்று தான் எதிரொலிக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் லியோ. பல சர்ச்சைகள் பல பிரச்சினைகளை தாண்டி இன்று படு மாஸாக வெளியாகியது.
திரையரங்கம் அதிரும் அளவுக்கு ரசிகர்கள் ஆரவாரம் காணப்படுகிறது. இந்நிலையில் லியோ திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் , படு பயங்கரம் , சூப்பர் என நல்ல விமர்சனங்களையே தந்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே அரசு உயர் நீதிமன்றம் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகளை மீறுபவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு வழங்கி இருந்தது.
தற்போது சேலம் பகுதியில் விஜய் தீவிர ரசிகர்கள் ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டத்தோடு பட்டாசுகளையும் கொளுத்தி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் ஆலோசனைக்கு மீறி இவ்வாறு ரசிகர்கள் நடந்து கொள்ளவது மறுபடியும் லியோ திரைப்படத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
Listen News!