• Sep 20 2024

தன்னுடைய பெற்றோருக்கு மீனா போட்ட கண்டிஷன்- தனத்தைப் பார்த்து மூர்த்தி சொன்ன வார்த்தை- திடீரென கத்தி எல்லோரையும் அழைத்த முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

முல்லை தனியாக அமர்ந்திருக்கும் போது கதிர் வந்து என்னாச்சு என்று கேட்க ஒரே தலைவலி துாங்கி எழுந்தால் சரி ஆகிடும் என்று சொல்லி சமாளிக்கின்றார்.தொடர்ந்து மீனா வீட்டில் ஜீவா லேட்டாக வர மீனாவின் அப்பாவும் அம்மாவும் என்ன ஆச்சு என்று விசாரிக்கின்றார்.அப்போது ஜீவா கொஞ்சம் வேலை அதிகமா இருந்திச்சு என்று  சொல்ல மீனா நீயும் அப்பா மாதிரி மேஜேனர் வைச்சிருக்கலாம் தானே என்று சொல்கின்றார்.


தொடர்ந்து மீனாவின் அம்மா தானும் அப்பாவும் திருச்சி கல்யாணம் ஒன்றிற்கு போகிறோம் வர இரண்டு மூன்று நாள் ஆகும் என்று சொல்ல மீனா அதெல்லாம் முடியாது அப்பா நீங்க மட்டும் போய்ட்டு வாங்க, தனம் அக்காவுக்கு டெலிவரி டைம் வந்திடுச்சு, என்னால கயலை பார்த்துக்க முடியாது நீ வீட்டில நின்று கயலை பார்த்துக்கோ அப்பா மட்டும் போய்ட்டு வரட்டும் என்று சொல்லி விட்டு உள்ளே செல்கின்றார்.

தொடர்ந்து கண்ணனும் ஐஸ்வர்யாவுமம தங்களது குழந்தையை வைச்சு கொஞ்சிட்டு இருக்கின்றனர். அந்த நேரம் கண்ணன் குழந்தையைக் கொண்டு போய் மூர்த்தியிடம் கொடுக்க மூர்த்தி குழந்தையை வாங்காமல் செல்கின்றார். இதனை நினைத்து கவலைப்பட கண்ணனை ஐஸ்வர்யா ஆறுதல்ப்படுத்துகின்றார்.

பின்னர் ஐஸ்வர்யா குழந்தையை வைத்திருக்க மூர்த்தி வந்து குழந்தையை வாங்குகின்றார். குழந்தையை வாங்கிய மூர்த்தி தனத்துடன் இருந்து பேசுகின்றார். அப்போது மூர்த்தி உடம்பில தெம்பு இருக்கிறவரைக்கும் நான் உழைச்சிட்டே இருப்பேன். நீ என் கூட இருந்தால் மட்டும் போதும் என்கின்றார். இதைக் கேட்டு தனம் யோசிக்கின்றார்.


அடுத்து கண்ணன் தனியாக அமர்ந்து யோசிச்சிட்டு இருக்கும் போது கதிர் சென்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார். நடந்தது நடந்து முடிஞ்சிட்டு அதையே யோசிக்காமல் அடுத்தது என்ன பண்ணலாம் என் யோசி என்று சொல்கின்றார். தொடர்ந்து தனமும் முல்லையும் பேசிட்டு இருக்கும் போது அவரது அம்மா வருகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

தொடர்ந்து அடுத்து வரும் எப்பிஷோட்டில் முல்லை தனத்தைப் பார்த்து வலி வந்த மாதிரி நடியுங்க அக்கா எல்லோரும் போகப் போறாங்க என்று சொல்ல தனம் பேசாமல் இருக்க முல்லை அக்கா என்ன ஆச்சு அக்கா வலி வந்திட்டா என்று தானே கத்தி எல்லோரையும் கூப்பிடுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமா முடிவடைவதைக் காணலாம்.  

Advertisement

Advertisement