• Sep 21 2024

லியோ படத்தில் சர்ச்சைகள்... முடிந்தது டிக்கட்டுகள்... போராட்டத்தில் ரசிகர்கள்... எழுந்தது பிரச்சினைகள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் எதிர் வரும் 19 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது பல சர்ச்சர்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இதனிடையே டிக்கட்டுகள் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


ஆவடியில் லியோ திரைப்பட டிக்கட் கிடைக்காததால் நடிகர் விஜயின் ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி உள்ள லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் வரும் 19ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. படத்திற்கான முன் பதிவுகள் துடங்கிய நிலையில் ரசிகர்கள் போட்டி போட்டுகொண்டு டிக்கட்டுகளை வாங்கி வருகின்றனர். 


இதனிடையே ஆவடியில் உள்ள பிரபல திரையரங்கில் லியோ பட முதல் காட்ச்சிக்கான முன்பதிவுகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கட்டுகள் விற்று முடிந்ததாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் கையில் லியோ பட போஸ்டருடன் திரையரங்கை முற்றுகை இட்டனர். குறைந்த அளவிலான டிக்கட்டுகள் மாத்திரமே விற்க்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களை பொலிஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Advertisement

Advertisement