தமிழ் திரை உலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர்கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
அவரின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் ஆகவும் உள்ளார்.
இவரும் நடிகை கன்னிகா ரவியும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் சினேகன் கன்னிகா குடும்பத்தினர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.அவர்களின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி அடிக்கடி அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதனைப் போலவே வீட்டில் நடக்கும் சின்ன சின்ன சந்தோசங்களையும் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது சினேகன் வீட்டில் உள்ள மாடு அழகான கன்று குட்டியை ஈன்று உள்ளது.புதுசாக வந்துள்ள அந்த உறவுக்கு துளசி என்று பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டு கன்னிகா புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!