நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் படத்தில் நடித்து வந்தார். இருப்பினும் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதனை அடுத்து தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகியது.அதன்படி முதற்கட்டப் படப்பிடிப்பானது கோவா மற்றும் சென்னையில் நிறைவடைந்தது.
தற்போது, படக்குழு இலங்கை சென்று வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.60 நாட்கள் நடக்கும் இந்த ஷெட்யூலில், படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 1000 வருடங்கள் பழமையான கதையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவாவில் இன்று படப்பிடிப்பை முடித்ததும், அடுத்த சில நாட்களில் படத்தின் அடுத்த அட்டவணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் அதிக பட்ஜெட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!