நடிகை சத்யப்ரியா 1954ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் சத்யப்ரியா.
1975ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற தமிழ் படத்தில் விஜய்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் சத்யப்ரியா. அதன்பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரில் நடிக்க துவங்கினார் சத்யபிரியா. அஞ்சலி, எதிர் காற்று, அக்னி பார்வை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் அதிலும் தான் யார் என்பதை நிரூபித்து இருந்தார்.
கோலங்கள், இதயம், வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ள சத்யப்ரியா கடைசியாக 2014ல் தமிழில் வாய மூடி பேசவும் என்ற படத்தில் நடித்தார். தற்போது எதிர்நீச்சல் நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவரது மகளுக்கு கடந்த 2015ஆம்.ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர்.
அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இவரா உங்களது மகள் என பலரும் கேட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!