• Sep 20 2024

'டான் படத்தில் நடிக்க என்னைத் தான் இயக்குநர் கேட்டார்'-அதிர்ச்சித் தகவலைக் கூறிய உதயநிதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்துக்குள் தன்னுடைய இமேஜை உயர்த்திக் கொண்ட முக்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ். ஜே சூர்யா நடித்திருந்ததோடு ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் வெற்றி விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட உதயநிதி இந்த படத்தின் வெற்றி விழா என்பதால் ஒரு சில உண்மைகளை கூறலாம் நினைக்கிறேன் என்றும் இந்த படத்தின் கதையை முதலில் நான்தான் கதை கேட்டேன் என்றும் கூறியுள்ளார் .

இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் பள்ளிக்கூட காட்சிகள் என்னால செய்ய முடியாது. அதனால் நான் இதைச் செய்யவில்லை என்று உதயநிதி கூறினார்.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் பேசியபோது உங்களுக்கு கதை சொன்னதை இயக்குநர் என்னிடம் சொல்லவே இல்லை என்று ஆச்சரியத்துடன் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

‘லைஃப் டைம் செட்டில்மன்ட் நன்றி ஆண்டவரே’-லோகேஷ் கனகராஜ் போட்ட உருக்கமான பதிவு

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement