விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2019ல் இருந்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இவ் சீரியலை பார்க்கிறார்களோ இல்லையோ, அதில் வரும் காட்சிகளை ட்ரோல் செய்து கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலனதே அதிகம் தான்.
அப்படி டி.என்.ஏ டெஸ்ட் ஒன்றிற்காக இந்த சீரியலை இப்படி இழுத்தடித்து வருகிறார்களே என்று நெட்டிசன்கள் புலம்பியும் வந்தனர்.மேலும் அப்படி ஒரு வழியா வெண்பாவுக்கு திருமணம் பாரதியின் டிஎன்ஏ முடிவு என்று எபிசோட் வந்த நிலையில் சீரியல் முடிந்துவிடும் என்று நினைத்து சந்தோஸப்பட்டார்கள் ரசிகர்கள்.
ஆனால் கதை நீண்டு கொண்டே செல்கின்றது.அதாவது கண்ணம்மாவிடம் பாரதி மன்னிப்பு கேட்டும் அதை ஏற்றுக்கொள்ளாது இரண்டு பிள்ளைகளையையும் கூட்டிட்டு வீட்டிற்கு செல்கின்றார்.
அதன் பிறகு உன்னை தப்பா பேசின யாருமே எங்களுக்கு வேணாம்மா..நீ மட்டும் போதும்..எங்களை தேடி கண்டுபிடிக்காத இடத்திற்கு போவம் என இரண்டு பிள்ளைகளும் கண்ணம்மாவிடம் அழுது கொண்டே சொல்கிறார்கள்.இதனால் கண்ணம்மாவும் அதற்கு சம்மதம் தெரிவித்து வீட்டை விட்டு கிளம்புகிறார்.
இதன் பிறகு சந்தோசத்தில் தேடிவருகின்றார் பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர்.இதனால் அவர் வந்து பார்த்ததுமே அவர்களுக்கு தெரியுது கண்ணம்மாவை காணவில்லை என்று. இதனை எண்ணி பாரதி கதறி அழுகின்றார்.
இதோ அந்த ப்ரமோ..
Listen News!