விஜய் டிவியல் பகல் நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் நம்ம வீட்டுப் பொண்ணு. இந்த சீரியலில் மீனாட்சியையும் கார்த்திக்கையும் அவரது பெரியப்பா குடும்பப் பொறுப்பு வரவேண்டும் என்பதற்காக சென்னைக்கு அனுப்பி இருந்தனர்.
சென்னைக்கு வந்த கார்த்தியும் மீனாட்சியும் சென்னையில் ஒருவர் வீட்டில் தங்கி இருக்கின்றனர். அத்தோடு வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும் இருவரும் முடிவெடுத்தனர். இருப்பினும் அவருடைய வீட்டுக்காரர் மீனாட்சியையும் கார்த்திக்கையும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் மீனாட்சி கர்ப்பமாக இருக்கின்றார். இதனை கார்த்திக்கிற்கு தெரியப்படுத்துவதற்காக ஒரு கடிதத்தில் எழுதி விட்டு செல்ல யாரோ மீனாட்சியை கடத்தி விடுகின்றனர். மேலும் கார்த்திக் மீனாட்சியைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கச் சென்ற போது கார்த்திக்கை ஜெயிலில் அடைத்து விடுகின்றனர்.
இதனால் கார்த்திக் எப்படி தப்பிப்பார் மீனாட்சியை எப்படி காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அத்தோடு இந்த சீரியல் தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!