இயக்குநர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
தன்னை மருத்துவமனையில் சந்திக்க யாரும் நேரடியாக வர வேண்டாம், visitors யாருக்கும் அனுமதி இல்லை என பாரதி ராஜாவே மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் இருப்பினும் வைரமுத்து, ராதிகா என பல பிரபலங்கள் நேராக சென்று பாரதிராஜாவை நலம் விசாரித்து அதை தமது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் பாரதிராஜா தொடர்ந்து ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
அவரது குடும்பத்தினர் உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என செய்தி வெளியானது.
நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தான் பாரதி ராஜாவின் மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!