• Sep 20 2024

பெண்களின் உணர்வுகளை புண்படுத்திய ரன்வீர் சிங்…அந்த புகைப்படம் தானா...கடைசியில் ஏற்பட்ட சிக்கல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தனது நிர்வாண புகைப்படங்களின் மூலம் இணையத்தில் புயலைக் கிளப்பு இருந்தார். அந்த படங்கள் பல சர்ச்சைகளையும் உருவாக்கியதோடு பேசும் பொருளாகவும் மாறி இருந்தது. இருந்தும் ரசிகர்களிடம் கடும் வைரலாகவும் செய்தது.

ஐந்தாக போல்டு போட்டோக்களால் சட்ட சிக்கலில் மாற்றியுள்ளார் ரன்வீர் சிங். மேலும் இவர் மீது மும்பை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரில், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடிகர் ரன்வீர் சிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பர்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நிர்வாண போட்டோக்களை ரன்வீர் சிங் வெளியிட்டு இருந்தார்.இதேபோல ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காகவும் போட்டோ சூட் செய்து இருந்தார்.

முன்னதாக நடிகை மிமிக் சக்கரவர்த்தி, ரன்வீரின் படங்கள் குறித்து பேசுகையில், இந்த போட்டோ சூட்டை ஒரு பெண் நடிகை செய்திருந்தால் விளைவு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருந்தார். அவள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் பாராட்டுக்கள் இப்படி இருந்திருக்குமா என யோசிக்கிறேன்.

எனினும் மாறாக இந்த சமூகம் அவளை அவமானப்படுத்துஇ இருக்கும். நாங்கள் சமத்துவத்தை பற்றி பேசுகிறோம் இது இப்போது எங்கே? இந்த விஷயத்தில் நமது பார்வையை விரிவுபடுத்தலாம் ஏனெனில் உடன் நிறைய தியாகத்துடன் வருகிறது என தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement