சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தைப் போல. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
துளசி கர்ப்பமாக இல்லை என்ற விஷயம் ராஜபாண்டிக்கு தெரிந்து விட்டதால் துளசியை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். இதனால் துளசி தனுடைய அண்ணாவான சின்ராசு வீட்டில் இருக்கின்றார்.
இப்படியான நிலையில் ராஜபாண்டியும் அவரது அப்பாவும் சேர்ந்து துளசியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்.அப்போது சின்ராசுவும் துளசிக்கு ஆதரவாக வந்து நிற்கின்றார். இருந்தாலும் அவர்கள் அடியாட்களை வைத்து சின்ராசுவையும் அடித்து வெளியே அனுப்பிட சொல்கின்றனர்.
ஆனால் அந்த நேரம் வீரசிங்கம் என்னும் கதாப்பாத்திரத்தில் சின்ராசுவுக்கு ஆதராவாக நடிகர் சஞ்சீவ் களமிறங்கியுள்ளார். இவர் சின்ராசுவுக்கு ஆதரவாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!