தமிழ் சினிமாவில் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக அண்ணாத்த என்னும் திரைப்படம் வெளியாகியிருந்து. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இருப்பினும் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யோகிபாபு ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இதையடுத்து, ஜெயிலர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தந்தையின் பிறந்தநாளுக்கு போகாத விஜய்- கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட அவரது அம்மா ஷோபனா
- கோபி, ராதிகா உறவு பற்றி தெரிய வந்த உண்மை… அடுத்து நடக்கப் போவது இது தான்..!
- தலையில் முடி இல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி
- விஜய் பட ஹீரோயினுடன் இணையும் நடிகர் சூர்யா..வெளியானது சூப்பர் தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!