தமிழில் நாடோடி ரிக்ஸாக்காரன், காசோதான், கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜெயக்குமாரி.
அந்த காலத்தில் கவர்ச்சி உடைகள் அணிந்து, தன் அழகால் ரசிகர்களை வசீகரித்த இவரை கவர்ச்சி நடிகை என்று அழைத்தார்கள்.
தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிகை ஜெயக்குமாரி மிகுந்த வறுமையில் வாடுகிறார். நடிகை ஜெயக்குமாரிக்கு 70 வயதிற்கு மேலாகிறது.
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அவருக்கு 2சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதால் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தற்போது தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!