சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு சகோதர பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தை போல.
இதில் துளசி வெற்றியைக் கொலை செய்யவில்லை. வெற்றி உயிரோடு தான் இருக்கிறார் என்பதை அறிந்து வெற்றியை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விட்டனர்.இதனால் துளசியும் விடுதலை ஆகி ராஜ பாண்டியுடன் சேர்ந்து விட்டார்.
இதனால் பொன்னி குஷியில் இருக்கின்றார்.எப்படியாவது சின்ராசு மனதில் இடம் பிடித்து விட வேண்டும் அவரது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் பொன்னி உறுதியாக இருக்கின்றார்.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் சந்தியா என்னும் தாசில்தார் என்னும் காரக்டரில் நடித்த வந்தவர் தற்பொழுது சீரியலை விட்டு விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரவர அவருக்கு இந்த சீரியலில் முக்கியத்துவம் குறைந்ததால் தான் அவர் சீரியலில் இருந்து விலகியிருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகின்றது.
Listen News!