தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்றாகிய சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'கயல்' சீரியல் ஆனது டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்று மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. இதில் கயலாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
அத்தோடு சைத்ரா வெறும் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் இப்போது வெள்ளித்திரை நடிகையாகவும் வலம் வருகிறார். அந்தவகையில் 'வலிமை, வட்டம்' படங்களில் இவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ், கனா காணும் காலங்கள் ஐயப்பன், நியூஸ் ரீடர் அபிநயா, உமா ரியாஸ் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலில் கயலின் அண்ணியாக தனம் ரோலில் நடிப்பவர் தான் நடிகை ஜானகி தேவி. இவர் இதற்கு முன்பும் பல படங்களில் நடித்துள்ளார். அதாவது 'காவலன், சுந்தர பாண்டியன், முத்துக்கு முத்தாக, றெக்க, புலிக்குத்தி பாண்டி' போன்ற பல படங்களில் நடித்து குணசித்திர நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
ஜானகி தேவி நடிப்பில் எந்தளவிற்கு ஆர்வம் உள்ளவரோ அந்தளவிற்கு கடவுள் பக்தியும் அதிகம் உள்ளவர். இந்நிலையில் சமீபத்தில் ஆன்மீகம் தொடர்பாக இவர் அளித்த பேட்டி யூடியூப்பில் வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு காரணம் அவர் கூறிய ஒரு விடயம் தான்.
அதாவது வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிய காரணத்தை ஜானகி அதில் ஷேர் செய்துள்ளார். பஞ்சமி தினத்தன்று நைட் ஷூட்டிங் சென்று வந்த பின்பு வீட்டில் புதியதாக வாங்கிய வாராஹி அம்மன் சிலையை வைத்து நடிகை ஜானகி பூஜை செய்துள்ளார். அப்போது தனது மகளிடம் சொல்லி சாமிக்கு பாலை எடுத்து ஒரு ஸ்பூனில் கொடுக்க சொல்லி இருக்கிறார்.
அப்போது தன்னுடைய குழந்தை கொடுத்த பாலை அம்மன் உறிஞ்சி குடித்ததாக ஜானகி தெரிவித்துள்ளார். இந்த தருணத்தின் போது தான் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி தன்னையும் மீறி அழுது விட்டதாகவும் ஜானகி அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசுபொருளாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!