முன்னணி நடிகரான சூர்யா தற்பொழுது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
சூர்யா காது கேளாத, வாய் பேச முடியாத கேரக்டரில் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதோடு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
வணங்கான் படத்தின் முக்கிய காட்சிகள் கன்னியாக்குமரி மற்றும் அதனை ஒட்டிய மீனவ கிராமங்களில் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஜுலையில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் கோவாவில் ஆரம்பிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் கோவாவில் அடுத்த கட்ட ஷுட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் லேட்டஸ்ட்டாக வெளியாகிய தகவலின் படி இப்படத்தில் இயக்குநர் ஏ.எல் விஜய்யும் இணைந்துள்ளாராம். ஏ.எல்.விஜய் தற்போது தனது படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில் பாலா மற்றும் சூர்யா மீதான மரியாதை காரணமாக இந்த படத்தில் பணியாற்ற ஓகே சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.எல்.விஜய்யின் அமைதியான தோற்றம், படக்குழுவில் உள்ளவர்களிடம் அமைதியான அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக அவரை இந்த படத்தில் பாலாவிற்கு உதவியாக இருக்க வைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் தான் இந்த முடிவை எடுத்தார்களாம் என்றும் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- ரித்திக் ரோஷன் கட்டாயம் இரண்டாவது திருமணம் செய்வார்- ஜோதிடர் சொன்ன ரகசியம் – மணப் பெண் யார் தெரியுமா?
- “ரூம் போட்டு யோசிப்பாங்களோ?- தன்னுடைய பாட்டை கிண்டல் செய்தவர்களுக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!