காதலை கவிதை வடிவில் காவியமாக படைக்கக் கூடிய திறன் கொண்ட ஒரு திறமையான இயக்குநர் கௌதம் மேனன். இதற்கென்றே தனி ரசிகர் கூட்டமே இவருக்கு உண்டு. இவர் இயக்கிய காதல் படங்களுக்கு உதாரணமாக மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் என இன்னும் இன்னும் எத்தனையோ படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அவருடைய ஒவ்வொரு படத்திலும் காதல் ரசம் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை போன்று மறக்க முடியாமல் இருக்கும். அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் காதல் நிறைந்திருக்கும்.
இவர் இயக்குநராக மட்டுமன்றி நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்து வருகிறார் பல படங்களில் நடித்து வந்த கௌதம் மேனன் 'ருத்ரதாண்டவம்' என்ற படத்திலே வில்லன் என்ற கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கௌதம் மேனன் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்துள்ளார், அதை தங்கர் பச்சன் இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷனில் கௌதம் மேனன் மீம்ஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது என் மகன் காட்டினான், உங்களுக்கு கடன் இருந்தால் காசு வேண்டுமானாலும் தருகிறோம் நடிக்காதீர்கள், படத்தை இயக்குங்கள் என ஒரு மீம் காட்டியதாக தங்கர் பச்சன், கௌதம் மேனனை வைத்துக்கொண்டே சொன்னார், இது எல்லோருக்கும் தர்மசங்கடம் ஆகியது.
Listen News!