தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தின் தமிழ் ரீக்கான ஆதித்ய வர்மா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்.
இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.மேலும் ஆதித்யவர்மா படத்தை இயக்குநர் பாலா தான் ஆபாசமாக எடுத்திருந்தார்.
படத்தை தயாரிப்பாளரும், விக்ரமும் பார்த்து பாதியிலேயே வெளியேறி இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாவிற்கு கட்டளையிட்டனர். ஏனென்றால் அந்த படம் படுகவர்ச்சியாகவும், பெண்களும் வெறுக்கக் கூடிய காட்சிகள் பல இருந்ததால் முதல் படத்திலேயே மகனுக்கு மோசமான விமர்சனம் கிடைத்துவிடும் என விக்ரம் பயந்தார்.
இதனால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என பாலாவிடம் விக்ரம் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி இருந்தாராம். அப்போது விக்ரம் மீது உள்ள கோபத்தை அவரது மகன் மீது காட்டி படத்தை மிக மோசமாக எடுத்து இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னேற முடியாமல் பெயரை கெடுத்து விட்டார் பாலா.விக்ரம் பாலாவிற்கு பிரச்சனை இருந்துள்ளது. அத்துடன் விக்ரம் வளர்ந்த பிறகு பாலாவை மதிக்காததால், பாலா விக்ரம் மகனை பழி வாங்கி விட்டார். இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான் என விக்ரம் தன்னுடைய மகனுக்கு தோளுக்குத் தோளாக நின்று மகான் படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்தார்.
ஆனால் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்த மகான் படமும் படு தோல்வியை தந்தது. இருப்பினும் மனம் தளராத துருவ் விக்ரம் தந்தையின் அறிவுரையின் பேரில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகராக வலம் வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.ஆனால் சினிமாவில் வளர வேண்டும் என துடித்துக் கொண்டிருந்த இளம் நடிகருக்கு சரியான பாதையை காட்டாமல் காலை வாரிவிட்டு பழிக்குப் பழி வாங்கிய பாலாவின் கீழ்த்தரமான செயல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!